கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 3 மட்டையிலக்கு கைப்பற்றி அசத்தினார்.
புனே:
ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் மட்டையாட்டம் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். கடைசி சுற்றில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார்.
தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ஓட்டத்தில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 28 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 ரன்னிலும், ரிங்கு சிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
6வது மட்டையிலக்குடுக்கு சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து, 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar