பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பிரார் வீசிய பந்தை படிதார் அடித்த நிலையில் அந்த பந்து 102 மீட்டர் அளவில் சிக்ஸருக்கு சென்றது.
மும்பை:
கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ஆர்.சிபி வீரர் ராஜத் படிதார் அடித்த பந்து முதியவர் ஒருவர் தலையில் விழுந்ததில் அவர் வலி தாங்காமல் அழத்தொடங்கினார். இந்த காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
அன்றைய போட்டியில் முதலில் மட்டையாட்டம் செய்த பஞ்சாப் அணி 210 ஓட்டங்கள் அடித்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 8 சுற்றில் விளையாடிகொண்டிருந்த போது ராஜத படிதார் களத்தில் இருந்தார். பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பிரார் வீசிய பந்தை படிதார் அடித்த நிலையில் அந்த பந்து 102 மீட்டர் அளவில் சிக்ஸருக்கு சென்றது.
பந்து விழும் இடத்தில் போட்டியை காண வந்த முதியவர் அமர்ந்திருக்கவே, அவரது தலையில் விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் முதியவர் அழுகத்தொடங்கினார். இதையடுத்து அவரை உடன் இருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர். முதியவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar