குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 49 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்து ஆடியது.
தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ்-கான்வே களமிறங்கினர். கான்வே 5 ஓட்டத்தில் வெளியேறினார். இதனையடுத்து வந்த மொய்ன் அலி 21 ஓட்டத்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த தமிழக வீரர் ஜெகதீஷன் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மிகவும் பொறுமையாக ஆடிய ருதுராஜ் 49 பந்தில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த டூபே 0, டோனி 7, என்று அடுத்தடுத்து வெளியேறினார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது. தமிழக வீரர் ஜெகதீஷன் 33 பந்துகளில் 39 ரன்களுடனும் சாட்னர் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
குஜராத் தரப்பில் முகமது சமி 2 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். குஜராத் அணி 134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar