ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வியடைந்த நிலையிலும், இன்னும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று 38 வயதாகும் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் செர்பியாவின் ஜோகோவிச்சிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 38 வயதாகும் ரோஜர் பெடரருக்கு இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஏற்கனவே போட்டிகளை குறைத்துக் கொண்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், போட்டிக்கு பின் பேட்டியளித்த அவர், ஓய்வு எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘என்னால் தொடர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். தற்போது ஓய்வு குறித்து எந்த திட்டமும் இல்லை’’ என்றார்.
ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar