அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் ஒருவர் மரணம் அடைந்துவிட மீதியுள்ள 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது./
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டபேரில் 15 பேர் குற்றவாளிகள் என்றும் ஒருவரை விடுதலை செய்வதாகவும் சென்னை போக்சோ நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளிகள் 15 பேர்களின் தண்டனை விபரம் இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது
The post அயனாபுரம் சிறுமி பாலியல் வழக்கில் ஒருவர் விடுதலை: 15 பேர் குற்றவாளி என தீர்ப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes