தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலை ஒரு சிறுவனை தன்னுடைய செருப்பை கழட்டி விடுமாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா இதுகுறித்து கூறியதாவது: அட…ம்! காலில் விழ குனிந்து பழக்கப்பட்டவர்கள், தன் காலணியைக் கழட்டக் குனிய முடியவில்லையா? ஊரார் பிள்ளையைக் காலணியைக் கழட்டச் செய்வது அதிகாரத்தின் உச்சகட்டம்! அரசு இதைக் கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
The post அங்கே குனிந்த அமைச்சர்களால் இங்கே குனிய முடியவில்லையா? ஸ்ரீப்ரியா கேள்வி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes