தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரீஷ் கல்யாண், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க தனக்கு ஆசை என தெரிவித்துள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, தாராள பிரபு போன்ற படங்கள் மூலம் பிரபலம் ஆனவர் ஹரீஷ் கல்யாண். வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டில் ஓய்வெடுக்கும் ஹரீஷ் கல்யாண், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் “உங்களுக்கு எந்த இயக்குனருடன் பணியாற்ற ஆசை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஹரீஷ் கல்யாண், எனக்கு நிறைய இயக்குனர்கள் பிடிக்கும். அவர்களில் எனக்கு பிடித்தது வெற்றிமாறன். அவர் சிறந்த அறிவாளி, படைப்பாளி. அவர் இயக்கிய அனைத்து படங்களும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற ஆசை. அவருக்கு அடுத்தபடியாக கவுதம் மேனன் எனக்கு பிடிக்கும். அவரது படங்கள் என்றாலே ஸ்பெஷல் தான். என கூறினார்.
Source: Malai Malar