ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக சாலையோர வியாபாரிகள் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். மக்களின் நடமாட்டத்தால் வாழ்க்கை நடத்துபவர்களில், செருப்பு தைக்கும் தொழிலாளர்களும் அடங்குவர்.
சாலையில் செல்வோரின் காலணிகளை பார்த்தே நாட்களை கடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், தற்போது ஊரடங்கு காரணமாக மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதே உண்மை. செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை ஊரடங்கு காரணமாக தேய்ந்து போயிருக்கிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில், வருமானம் இன்றி தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
Source: Malai Malar