டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமூக இடைவெளி உள்ளிட்டவை பின்பற்றவில்லை எனக்கூறி டாஸ்மாக்கை மூட உத்தரவிட்டது. மேலும் மே 17-ந்தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar