தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். மாவட்ட வாரியாக மொத்த விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பரவியவர்களில் 6 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக விவரம்:-
செங்கல்பட்டு – 4
சென்னை – 39
கோவை – 1
கடலூர் – 1
திண்டுக்கல் – 1
ஈரோடு – 1
காஞ்சிபுரம் – 1
கன்னியாகுமரி – 1
மதுரை – 2
ராமநாதபுரம் – 1
தேனி – 1
திருவள்ளூர் – 3
தூத்துக்குடி – 1
திருநெல்வேலி – 1
விழுப்புரம் – 2
மொத்தம் – 61
Related Tags :
Source: Maalaimalar