ரெயில் நிலையங்களில் உள்ள ரிசர்வேஷன் கவுண்டர்களில் நாளை முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து பயணிகள் ரெயில் சேவையை இந்திய ரெயில்வே நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கி வருகிறது. இந்தியாவில் 4-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஏ.சி. அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கிடையே, ஜூன் 1-ம் தேதி இயக்கப்பட உள்ள 200 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், ரெயில் நிலையங்களில் உள்ள ரிசர்வேஷன் கவுண்டர்களில் நாளை முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar