தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவன் இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். சமீபத்தில் இவர் இயக்கிய என்ஜிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவு செய்யும் செல்வராகவன், தற்போது இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. ‘நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்’ என்று கூறியுள்ளார்.
Related Tags :
Source: Malai Malar