தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் விஷாலுக்கு பதில் வேறுஒரு நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Malai Malar