Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 585 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் 29-ந்தேதி 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 30-ந்தேதி 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஆனால் மே 31-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அன்று 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் 1-ந்தேதி 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் 2-ந்தேதி தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐந்தாவது நாளாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 27,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 585 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »