டெல்லியில் ஜூலை 31-ம் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அம்மாநில துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. டெல்லியில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், டெல்லியில் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை மனிஷ் சிசோடியா வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் திட்டம் பற்றி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழலுக்கு தகுந்தாற் போல் தயாராக திட்டம் உருவாக்கப்படும். எனவே மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar