மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அரசால் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Source: Maalaimalar