பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தபிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நெல்லை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன
* விவசாயிகள், தொழில் துறையினர் வைத்த கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்
* கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.
* நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.
* நெல்லை மாநகருக்கான அரியநாயகிபுரம் குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்
* நெல்லை மாநகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன
* தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கு அரசு சார்பில் சலுகை வழங்கப்படுகிறது
* பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது
* தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Source: Maalaimalar