தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை, சென்னையில் புறநகர் தொடர் வண்டிசேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வட திசையில் கடலூருக்குக் தென்கிழக்கே 320 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 350 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து 410 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar