‘ஆசிரியர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை டுவிட்டர் நிறுவனம் உதவியுடன் படக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆசிரியர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கணினி மயமான நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க டுவிட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Malai Malar