சோதனை கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி விளையாடி வரும் அஷ்வினுக்கு, ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய சோதனை கிரிக்கெட் அணியில் அசத்தி வரும் தமிழக ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய ஒயிட்-பால் அணியில் மீண்டும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், அதற்கு அவர் சரிபடமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.
அஷ்வின் குறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘எனக்கு தெரிந்து அஷ்வின் இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. ஏழாவது மட்டையாட்டம் ஆர்டரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அந்த இடத்தை இந்த இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் நிரப்பிவிட்டார். ஜடேஜாவும் அணியில் இருக்கிறார்.
அதனால் அவர் அணிக்கு சரிபடமாட்டார். ஆனால் எப்படியும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத வீரராக சோதனை கிரிக்கெட்டில் அஷ்வின் ஜொலிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar