வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று பொன்ராஜ் கூறினார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:
* அப்துல் கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம். அவர் கனவை நனவாக்க தொடர்ந்து உழைப்பேன்.
* அப்துல் கலாம் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் இன்று வரை தடுத்தது பாஜக அரசு.
* வல்லரசு இந்தியா என்ற கலாமின் கனவை நனவாக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டது.
* 5.7 லட்சம் கோடி கடனை வைத்துள்ள தமிழகத்தின் நிலையை மாற்றுவோம்.
* வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறும்.
* மாற்றம் இப்போது வராவிடில் எப்போதும் வராது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar