சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல். போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
14-வது ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.
இந்த போட்டியை ஏப்ரல் 8-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் தொடங்க முடிவு செய்துள்ளது. மே மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மும்பையில் மட்டும் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா 2-வது அலை வீசுவதால் மும்பையில் எந்த ஒரு ஐ.பி.எல். ஆட்டத்தையும் நடத்த பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.
சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல். போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான இடங்கள் குறித்து ஆட்சிமன்ற குழுவில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டிக்கான இடங்கள் தொடர்பாக மாநில அரசுகளிடம் கிரிக்கெட் வாரியம் முதலில் உத்தரவாதம் தரவேண்டும்.
பஞ்சாப்பா? அல்லது ஐதராபாத்தா? என்று யூகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. எந்த இடங்களில் போட்டி நடைபெறும் என்பது குறித்து ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவில் இறுதி முடிவு செய்யப்படும்.
மும்பையில் கொரோனாவின் தன்மை குறித்து கண்காணிக்கப்படும் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவில் விவாதிக்கப்படும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar