பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிதிவண்டி சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் அதிமுகவிடம் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar