சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
மும்பை:
ஐபிஎல் 2021 பருவம் டி20 கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ரிஷாப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா, டாம் கரண், அவிஸ் கான்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar