ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளிலுமே சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் முதல் வெற்றியை எந்த அணி பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சுசாம்சன், பென்ஸ்டோக்ஸ், பட்லர், கிறிஸ்மேரிஸ், ராகுல் திவேதியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க்அகர்வால், கிறிஸ்கெய்ல், நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் ராகுலும், அகர்வாலும் அபாரமான அதிரடியை வெளிப்படுத்தினார்கள். அதே போல் இந்த சீசனிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பனித்துளி காரணமாக 2-வது மட்டையாட்டம் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் 12-ல், பஞ்சாப் 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar