அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பிரான்சில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50.67 லட்சத்தைக் கடந்துள்ளது.
பாரிஸ்:
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், பிரான்சில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50,67216 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99,135 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3.10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 46.57 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar