Press "Enter" to skip to content

அடங்காதே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் அடங்காதே படத்தின் குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் கதாநாயகியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நீண்ட காலமாக உருவாகி வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதையடுத்து விரைவில் திரையரங்கத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »