கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சென்னை அணியைச் சேர்ந்த ஒருவரும் சிக்கியுள்ளார்.
ஐபிஎல் 2021 பருவம் இந்தியாவில் உள்ள ஆறு நகரங்களில் நடக்கிறது. முதற்கட்டமான சென்னை, மும்பை வான்கடே மைதானங்களில் நடைபெற்றது. தற்போது அகமதாபாத், டெல்லி மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஆடும் லெவன் அணியில் விளையாட வில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் கிசுற்றுமேன்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அகமதாபாத்திலும் உள்ளன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar