பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பருவத்தில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஓவியா டுவிட்டரில், என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில், ‘எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில், விளம்பர ஒட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த விளம்பர ஒட்டிகளை ஒட்டிய 17 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து ‘என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo) என்ற வலையொட்டை (வலையொட்டு (ஹேஷ்டேக்)) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக விளம்பர ஒட்டி ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற வலையொட்டை (வலையொட்டு (ஹேஷ்டேக்))யும் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
[embedded content]
Source: Malai Malar