திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டுதோறும் மாநிலங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:
திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டுதோறும் மாநிலங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது.
சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு, இந்த தரவரிசை உருவாக்கப்படுகிறது.
அந்தவகையில், கடந்த 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலை நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் நேற்று வெளியிட்டார்.
அதில், 75 புள்ளிகள் பெற்று கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 74 புள்ளிகள் பெற்று இமாசலபிரதேசமும், தமிழ்நாடும் இரண்டாம் இடம் பிடித்துள்ளன. மிசோரம், அரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் முந்தைய நிதியாண்டில் பின்தங்கி இருந்தன. ஆனால், இந்த பட்டியலில் முன்வரிசைக்கு வந்துள்ளன.
அதே சமயத்தில், பீகார், ஜார்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்கள் மிகக்குறைவான புள்ளிகள் பெற்று கடைசி இடம் வகிக்கின்றன.
யூனியன் பிரதேசங்களில் சண்டிகார் 79 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 68 புள்ளிகளுடன் டெல்லி 2-ம் இடத்தில் உள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி இலக்க குறியீட்டு எண், 6 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar