பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர். ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் ஆரி
திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக உணவு வழங்கி இருக்கிறார் ஆரி. இதற்கு பொது மக்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
[embedded content]
Source: Malai Malar