ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜ் குந்த்ரா
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar