தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்த சவுரப் சவுத்ரி, இறுதிச்சுற்றில் 7-வது இடத்தை பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா பங்பேற்றனர். 6 சுற்றுகளை கொண்ட தகுதிச்சுற்றில் சவுரப் சவுத்ரி சிறப்பாக செயல்பட்டு 586.28 (95, 98, 98, 100, 98 மற்றும் 97 ) புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்தியாவை சேர்ந்த சவுரப் சவுத்ரி, இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்திய என்ற சிறப்பையும் பெற்றார். ஆனால் இறுதிச்சுற்றில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. அவரால் 7-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் பதக்க வாய்ப்பு நழுவியது.
ஈரான் வீரர் முதல் இடத்தையும், செர்பிய வீரர் இரண்டாவது இடத்தையும், சீன வீரர் மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பதக்கம் வென்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar