கோபிநாத், விஜய் சங்கர், டேரில் பெராரியோ ஓரளவிற்கு ஓட்டங்கள் சேர்க்க, சேலம் அணி 143 ஓட்டங்கள் என்ற இலக்கை சேப்பாக் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20-யில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. தொடக்க வீரர் அபிஷேக் 10 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து வந்த ரவி கார்த்திக்கேயன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் கோபிநாத் 24 பந்தில் 33 ரன்களும், விஜய் சங்கர் 28 பந்தில் 32 ரன்களும், கேப்டன் டேரில் பெராரியோ 22 பந்தில் 39 ரன்களும் சேர்த்தனர். இதனால் சேலம் அணி 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சோனு யாதவ் அதிகபட்சமாக 3 மட்டையிலக்குடும், ஹரிஷ் குமார் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
142 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மட்டையாட்டம் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் சேலம் அணியை வீழ்த்தினால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை ருசிக்கும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar