Press "Enter" to skip to content

வடிவேலு படத்தில் பிரியா பவானி சங்கர்?

டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அடுத்ததாக வடிவேலுவுடன் நடிக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம், குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இவ்வாறு டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர், மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரியா பவானி சங்கர்

அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »