தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆர்.சி.பி.யை 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் இன்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்த ஆர்.சி.பி. அணி 92 ஓட்டத்தில் படுமோசமாக சுருண்டது.
பின்னர் 93 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. மட்டையாட்டம்கில் சொதப்பிய ஆர்.சி.பி. பந்து வீச்சிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 9.1 சுற்றில் 82 ஓட்டங்கள் குவித்தது. ஷுப்மான் கில் 34 பந்தில் 48 ஓட்டங்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 சுற்றில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar