ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி தொடங்கியதை அடுத்து சென்னை, மும்பைக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடியது.
அபுதாபி:
இப்படி தொடர்ந்து கெத்து காட்டி வரும் சென்னை அணிக்கு சில குறைபாடுகள் இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பட்டியலிட்டு உள்ளார்.
அவர், ‘சென்னை அணி, நடப்பு ஐபிஎல் பருவத்தில் நன்றாக விளையாடி வந்தாலும் அவர்களுக்கென்று சில குறைபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதை மற்ற அணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான், அவர்களுக்கு உள்ள குறைபாடுகள் என்ன, யாரெல்லாம் சரியாக திறனை வெளிப்படுத்துவதில்லை என்றெல்லாம் பட்டியலிடப் போவதில்லை. ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி தொடங்கியதை அடுத்து சென்னை, மும்பைக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடியது.
அந்தப் போட்டியில் சென்னை அணி, அடுத்தடுத்து 4 மட்டையிலக்குடுகளை இழந்து திணறியது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மும்பை தவறவிட்டது’ என்று சூசகமாக சென்னை அணியின் மட்டையாட்டம் அந்தளவுக்கு வலுவாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar