Press "Enter" to skip to content

காங்கிரஸ் தலைவர் பதவியில் சித்து தொடர வாய்ப்பு எனத் தகவல்

அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கேப்டன் அமரிந்தர் சிங் முதலமைச்சராகவும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சித்து காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவராகவும் இருந்து வந்தனர். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அமரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், திடீரென சித்துவும் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் உள்ளது. அதேவேளையில் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

நேற்றிரவு நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் சரண்ஜித் சிங்கை சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையிலான சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில் சித்து காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட இருப்பதாகவும், பஞ்சாப் அரசு முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது இந்த குழுவிடம் ஆலோசனை நடத்தும் என்றும் கட்சி வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது. அந்த குழுவில் முதல்வர், சித்து மற்றும் அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »