சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். 18 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கிறார் என குலாம் நபி ஆசாத் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, அகில இந்திய அளவில் நிலவும் அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர். அப்போது எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். அவர் முதலமைச்சர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி. அவர் சிறந்த முதலமைச்சராக செயல்படுகிறார்.
கடுமையான உழைப்பாளி. தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குகிறார். அவருடைய தந்தை கருணாநிதியை போல் 18 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கிறார். எங்களுக்குள் நீண்ட கால நட்புறவு தொடர்கிறது என தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar