தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் ‘மண்டேலா’ படத்தில் சொல்லி இருந்தார்கள்.
உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.
இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இந்த 14 படங்களையும் பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்வர். அந்த ஒரு படம் ‘மண்டேலா’-வாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
[embedded content]
Source: Malai Malar