செகந்திராபாத் கிளப் இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த கிளப்களில் ஒன்றாகும்.
செகந்திராபாத்:
இந்தியாவின் பழமைவாய்ந்த கிளப்களில் ஒன்றான செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள செகந்திரபாத் கிளப் ஆங்கிலேயர்களால் 1878-ல் நிறுவப்பட்டது. செகந்திராபாத் நகரத்தின் மையத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கிளப் இந்தியாவின் பழமைவாய்ந்த 5 கிளப்களில் ஒன்றாகும். இந்த கிளப்பிற்கு ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், ‘பாரம்பரிய’ அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இந்த பழம்பெருமை வாய்ந்த செகந்திராபாத் கிளப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar