முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 சுற்றுகள் முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.
தவன் 12 ஓட்டத்தில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ 56 ஓட்டத்தை எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த ராஜபக்சே 27 ரன்னிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 15 ரன்னிலும் வெளியேறினர்.
லிவிஸ்டோன் 22 ஓட்டத்தை எடுத்தார். ஜிதேஷ் சர்மா 38 ஓட்டங்கள் அடித்து களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி 20 சுற்றுகள் முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சஹல் அதிகபட்சமாக 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜாஸ் பட்லரும்16 பந்துகளில் 30 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 68 ஓட்டங்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்னிலும், படிக்கல் 31 ரன்னிலும் தங்களது மட்டையிலக்குடை பறிகொடுத்தனர்.
இறுதியில் ஹெட்மையர் 16 பந்துகளில் 31 ஓட்டத்தை குவித்து களத்தில் இருந்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 மட்டையிலக்கு மட்டும் இழந்து 190 ஓட்டங்கள் அடித்ததுடன், 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar