அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ஓட்டங்கள் எடுத்தனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 160 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 38 பந்துகளில் இரண்டு 6, 4 பவுண்டரி என 50 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 48 ஓட்டங்கள், ஜெய்ஸ்வால் 19 ஓட்டங்கள், ராசி வான் தேர் துசன் 12 ஓட்டங்கள் (நாட் அவுட்), ரியான் பராக் 9 ஓட்டங்கள், ஜோஸ் பட்லர் 7 ஓட்டங்கள், டிரென்ட் பவுல்ட் 3 ஓட்டங்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரப்பில் சேட்டன் சகாரியா, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் மிச்சேல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள்.. கர்நாடகாவில் திறந்து மூன்றே நாட்களில் சேதமடைந்த மிதவை பாலம்
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar