Press "Enter" to skip to content

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்பிணை என்று நீதிமன்றம் உத்தரவு.

மலையாள திரைப்படம் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது நடிகை ஒருவர் கொச்சி காவல்துறையில் பாலியல் புகார் கொடுத்தார்.

 அதில் நடிகர் விஜய்பாபு, தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் நடிகர் விஜய்பாபு மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனை அறிந்த நடிகர் விஜய்பாபு, வெளிநாடு தப்பி சென்றார். எனவே அவரை பிடிக்க கேரள காவல் துறையினர் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்பாபு ஜார்ஜியா நாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. எனவே அங்கிருந்து அவரை இந்தியா அழைத்து வர காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

விஜய்பாபு

இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்க கேட்டு நடிகர் விஜய்பாபு கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய் பாபுவுக்கு முன்பிணை வழங்க அவர் கேரளா திரும்ப வேண்டும். இதற்கான விமான அனுமதிச்சீட்டை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் அனுமதிச்சீட்டை தாக்கல் செய்த பின்பு அவரது பிணைமனு பரிசீலனை செய்யப்படும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »