சிவகங்கை | சிங்கம்புணரி அண்ணா நகரில் அருள்வாக்கும் ஸ்ரீ ராமர் திருக்கோவிலில் அமைந்துள்ள நவகிரக பரிகாரத்தலமான இந்த கோவிலில் நவகிரகங்கள் அனைவரும் தம்பதி சமோதரராய் அருள்பாளிப்பது சிறப்பாகும்.
இந்த கோவிலில் இன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஜென்ம சனியாக பிரவேசிப்பதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அந்த பூஜையில் ஹோமத்தில் நீலா சனீஸ்வருக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கணபதி சடங்குத்தீ, நவகிரக பரிகார சடங்குத்தீ, சனி நிவர்த்தி பரிகார சடங்குத்தீ முடிந்து பூர்ணகுதியுடன் யாக வேள்விகள் நிறைவு பெற்றன.
மேலும் படிக்க | மன்னார்குடி கோவிலில் நடைபெற்ற கால பைரவருக்கான சிறப்பு பூஜை…
அதைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் கோவிலை வலம் வந்த உடன் நீலா சமேத சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கலச அபிஷேகங்களும் நிறைவு பெற்றது. அதன் பிறகு ராஜ வேடத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி நீலா உடனான சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சனி பெயர்ச்சி பரிகார ஹோமங்களில் பங்கேற்று பரிகார பூஜைகள் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அருட்பிரசாதங்களும் அன்னதானமும் நடைபெற்றது.
மேலும் படிக்க | ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மகா குடமுழுக்கு…
Source: Malai Malar