Press "Enter" to skip to content

சற்றே சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.31,288க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.31,288க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,911க்கு விற்பனைகி வருகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.50,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னயைில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.50.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 8ம் தேதி தங்கம் விலை ரூ.31,176 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்து வருகிறது.

கடந்த 25ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.30,896க்கும், 27ம் தேதி ரூ.31,056, 28ம் தேதி ரூ. 31,000, 29ம் தேதி ரூ.30,848, 30ம் தேதி ரூ.31,128க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3,883க்கும், சவரன் ரூ. 31,064க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதியன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,922க்கும், சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 31,376க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் ரூ.312 அளவுக்கு உயர்ந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், சனிக்கிழமையின் விலையிலேயே நேற்று தங்கம் விற்பனையானது. இந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றுஇ சென்னையில் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »