ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்து செயல்படவில்லை என்பது சமீபத்திய சோதனையில் தெரியவந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஆட்டத்தையே மாற்றப் போகிறது என்று குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கோவிட்-19 கிசிச்சைக்கு அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: BBC.com