Press "Enter" to skip to content

வேல் யாத்திரை: பாஜகவின் பேரணிக்கு அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி உத்தேசித்துள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அப்போது தமிழக அரசு சார்பில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் தீவிரமாகும் வேளையில், இந்த யாத்திரைக்கு அனுமதி கொடுக்க இயலாது. இந்த யாத்திரையின் திட்டம், அதில் எவ்வளவு பேர் பங்கெடுப்பார்கள், யாத்திரையில் பங்கெடுப்போர் எங்கு தங்குவார்கள் போன்ற விவரங்களைப் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிடவில்லை. இத்தகைய நிலையில், அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்குவது இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முருகன்

தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தணியில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த யாத்திரை, திருச்செந்தூரில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்த விவகாரத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாரதிய ஜனதா கட்சியும், அதற்கு தடை விதிக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளும் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு அளித்துள்ளன.

இதற்கிடையே, இதே விவகாரத்தில் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தால், கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரை நிறைவு பெறவிருப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் வழிவகுக்கலாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »