ஆப்கானிஸ்தானில் தாலிபன் நடத்தும் தேடுதல் வேட்டை – யாருக்கு இலக்கு?
மேலை நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர், ஆப்கானிஸ்தானின் அரசுப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாக தாலிபன்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். காபூலுக்குள் தாலிபன்கள் நுழைந்த பிறகு வியக்க வைக்கும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் தாலிபன்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித். அதிலும் மன்னிப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
Source: BBC.com