ஹெச்ஐவி பாதிப்பிலிருந்து சுயமாக விடுவித்துக் கொள்ளும் பெண் உடல்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவ சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி-யிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. உலக அளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் ஹெச்.ஐ.வி வைரஸை அழித்ததாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். அவருடைய ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்கள் சோதிக்கப்பட்ட போது, ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றின் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ‘இன்டர்னல் மெடிசின்’ என்கிற சஞ்சிகையின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
Source: BBC.com